Followers

Thursday 14 August 2014

எப்படி...?





கருவாடு நாற்றம் என்று
கருத்து சொன்னால் எப்படி...?

இடியாப்பம் சிக்கல் என்று
பார்த்து சொன்னால் எப்படி...?

கற்பூர புத்தி என்று
களவாடுபவன் சொன்னால் எப்படி...?

தத்துவம் இது என்று 
தப்பானவன் சொன்னால் எப்படி...?

அரை குடம் அல்லாட
நிறைகுடம் என்றால் எப்படி...?

எப்படி எப்படி எப்படி என்று
எதிர்வாதம் செய்தால் எப்படி...?

எப்படி எப்படி எப்படி அதோ
அப்படி அப்படிஅப்படி தான்....!






11 comments:

  1. எப்படி
    எப்படி எப்படி எப்படி
    இப்படி இப்படி இப்படித்தான்!
    இப்படி அழகிய கவிதை எழுதினால்
    எப்படி?!!! என்று!!!!

    ReplyDelete
  2. எப்படி எப்படி என்று கேட்டால் ,வாலி எழுதிய புகழ் பெற்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
    2. உங்களுக்கு எப்படி பகவான்ஜீ அந்த மாதிரி பாட்டெல்லாம் நியாபகத்துக்கு வருது?

      Delete
  3. வணக்கம்

    தங்களின் கவிதையோ.
    அப்படி இப்படி இருக்கு...
    நான் என்னவென்று கருத்துச் சொல்வேன்
    உண்மையில் இரசிக்கவைக்கும்வரிகள்.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே.

      Delete
  4. அடாடா... அப்படி, இப்படினு போட்டு எப்படியோ ? ஒருகவிதை எழுதிட்டீங்களே இப்படி.

    ReplyDelete
    Replies
    1. ஆமா...அப்படி இப்படின்னு ஒரு கவிதை போட வேண்டாமா...? அதான் இப்படி...எப்படி.../

      Delete
  5. எப்படி எப்படின்னு கேட்டு, எதுக்குமே பதிலே சொல்லாம கவிதையை முடிச்சுட்டீங்களே ?

    வரிகள் அனைத்தும் அருமையான கேள்விகள். ரசித்தேன்.

    ReplyDelete
  6. உங்கள் தளத்திற்கு இன்று என் முதல் வருகை இனிமேல் அடிக்கடி வருவேன் உங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete