வெண்புறாவே சொல்லடி
வெட்கம் விட்டு கேட்கின்றேன்
கடிதச்சுருள் காணவில்லை
காலைக் கண்டு வருந்துகின்றேன்
பறந்து வந்து நிற்கின்றாயே
பார்த்து வரச் சொன்னானா...?
பசலை படர்ந்த என்முகம்
பார்த்த நினைவில்லையோ...? உனக்கு
ஒட்டிய கண்ணமதில்
ஒய்யாரம் இல்லையடி
ஓயாமல் புலம்பியதால்
தோழிகள் உடன் இல்லையடி
விளையாட்டாய் ஓரக்கண்நோக்கல்
வினையாகிப் போனதெனக்கு
பொருள் சேர்க்கப் போனானடி - நான்
பொருள் இல்லாமல் போனேனடி
வெண்புறாவே - எங்கே...?
பறந்து செல்கின்றாய்
பாவை வருத்தம் பகிர
பறந்து செல்கின்றாயா அவனிடம்...?
வெண்புறா கவிதையின் வெண்பாக்கள் அருமை சகோதரி.
ReplyDeleteமுதல் கருத்துரைக்கு நன்றி சகோதரரே..
ReplyDeleteஅருமை... தேவையான பொருட்கள் போதும் என்று சொல்வதற்கு செல்கிறது....
ReplyDeleteநன்றி. தனபாலன் சார்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅழகிய வெண்பாக்கள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் அவர்களே.
Deleteஆஹா என்ன ஒரு காதல் கவிதை மிகவும் ரசித்தோம் சகோதரி! முதலில் எங்களை மன்னிக்கவும்! நாங்கள் தாங்கள் ஆண் என்று நினைத்துவிட்டோம்! எங்களில் ஒருவர் பெயர் துளசிதரன் துளசி என்றுதான் அழைப்பது வழக்கம் ஆகவே இந்தக் குழப்பம்!
ReplyDeleteநன்றி சகோதரரே.
Deleteபரவாயில்லை.பெயர் குழப்பம் இருப்பது தெரிந்தது ஆகையால் கருத்து இடும்போது துளசி சகோதரி என சிலர் தளங்களில் இட்டேன்.
நன்றி.
வெண்புறாவைக் கொண்டு அருமையான ஒரு காதல் கவிதை.
ReplyDelete"//விளையாட்டாய் ஓரக்கண்நோக்கல்
வினையாகிப் போனதெனக்கு//" -
அருமை. அருமை.
நன்றி சொக்கன் அவர்களே.
ReplyDelete